தூத்துக்குடியில் திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் கனிமொழி எம்பி நடத்தினார்

தூத்துக்குடி, ஏப். 28: தூத்துக்குடியில் திமுக மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணலை கனிமொழி எம்பி நடத்தினார். திமுகவில் மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகளை புதிதாக நியமித்திடும் வகையில் நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருந்த மகளிரணி மற்றும் தொண்டரணியை சேர்ந்தவர்களிடம் கனிமொழி எம்பி நேர்காணல் நடத்தினார்.

இதில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர்களும், அமைச்சர்களுமான கீதாஜீவன்(வடக்கு), அனிதா ராதாகிருஷ்ணன்(தெற்கு), மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, மகளிரணி துணை செயலாளர் தமிழரசி, மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி, தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து