தூங்கியவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

 

வெள்ளகோவில்,மே19: வெள்ளகோவில் அருகே உள்ள செமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (40). இவர் நவெள்ளகோவில் பஸ் நிலையத்தில் இருந்தபோது அதிகாலை நேரம் என்பதால் கார்த்திக் லேசாக கண் அசந்து உள்ளார். அப்போது காங்கேயம்,அகிலாண்டபுரம், சிவசக்தி காலனியை சேர்ந்த கோகுல் (21), கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (20), ஆகிய இருவரும் பஸ் ஸ்டாண்டில் தூங்கி கொண்டிருந்த கார்த்திக் என்பவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.1,500 பணத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை