தூக்கு போட்டு முதியவர் சாவு

பெண்ணாடம், ஆக. 18: பெண்ணாடம் அடுத்துள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் முருகேசன்(56), விவசாயி இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் நீண்ட நாட்களாகவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு அடிக்கடி உடல் வலி வந்து மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்று அதன் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முகேஷ் ராஜா அளித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்