தூக்குபோட்டு வாலிபர் சாவு போலீசாரிடம் உடலை கொடுக்க மறுப்பு

புவனகிரி, ஜூலை 7: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.சித்தேரி வடுவங்குளம் பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ்(22). இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அருண்ராஜின் உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார், பு.சித்தேரி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால் அதற்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை போலீசார் மீண்டும் பு.சித்தேரி கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு உயிரிழந்த அருண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அருண்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து புவனகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை