துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி

திருமலை: துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பிரபல ரவுடி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரை சேர்ந்தவர் ஆரிப், பிரபல ரவுடி. இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் போலீசார் ஆரிப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஆரிப் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் நிஜாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆட்டம், பாட்டத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது, கேக் வெட்டி தனது சகாக்களுடன் உற்சாகமாக தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆரிப் ஒரு கார் மீது அமர்ந்தபடி வானத்தை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் 3 சுற்றுகள் சுட்டார். அப்போது அவரை, உடன் இருப்பவர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசார் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து ஆரிப் வைத்துள்ள துப்பாக்கிக்கு லைசென்ஸ் உள்ளதா? அல்லது கள்ளத்துப்பாக்கியா என விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!

பட்டியலின மாணவரை ஐஐடியில் அனுமதிக்க உத்தரவு

கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது : திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்