தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் 25 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் 25-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவுத்திடலில்  55 விற்பனை கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பட்டாசு விற்பனையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகள் அமைக்கலாம் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை