Thursday, September 19, 2024
Home » தி.நகரில் ரூ.5 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அபகரித்த பெண் கைது

தி.நகரில் ரூ.5 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அபகரித்த பெண் கைது

by kannappan

சென்னை: தி.நகரில் ரூ.5 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை போலி ஆவணம் தயாரித்து, அபகரித்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தி.நகர், வெங்கட நாராயணன் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ரமேஷ் (59). இவர், தி.நகரில் உள்ள தனது குடும்ப சொத்தான 2231 சதுர அடி கொண்ட ரூ.5 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை போலி உயில் தயாரித்து சிலர் அபகரிப்பு செய்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், புகார்தாரின் தாத்தா சுப்பையா கடந்த 1946ம் ஆண்டு கிரையம் பெற்ற சொத்தினை, போலியான உயில் ஆவணம் தயாரித்து அதன் மூலம் கடந்த 2005ம் ஆண்டு லட்சுமி என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்யப்பட்டதும், அதனை தொடர்ந்து அவரது கணவர் மனோகரன் என்பவருக்கு செட்டில்மென்ட் செய்ததும், பின்னர் சண்முகசுந்தரம் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்ததும், அதனை பயன்படுத்தி விக்னேஷ் என்பவருக்கு விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டுதும் தெரியவந்தது. இதையடுத்து நிலமோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக  கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது கணவர் மனோகரன், சண்முகசுந்தரம் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அதில் கோடம்பாக்கம், வெள்ளாலர் தெருவை சேர்ந்த லட்சுமி (51),  நில மோசடி செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

nine + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi