திருவெறும்பூர் அருகே வெங்கடாசலபதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு

 

திருவெறும்பூர், டிச.24: வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் நேற்று அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன குடியிருப்பில் வெங்கடாசலபதி கோவில் உள்ளது.

இந்த கோவில் நேற்று வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் பெல் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமான கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு