திருவெறும்பூர் அருகே தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடி திருவிழா

திருவெறும்பூர், ஆக.7: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலனி காமதேனு நகரில் உள்ள  பூரணா புஷ்கல சமூக தலைவட்டி அய்யனார் கோவில் ஆடி மாத திருவிழா நடந்தது. கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 4ம் தேதி பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அய்யனாருக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு நிகழ்வாக நேற்று மருளாளிக்கு சாமி வரவழைக்கப்பட்டு குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அரிவாள் மீது ஏறி மருளாளி பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது