திருவாடானை தொகுதியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்

திருவாடானை, நவ.7: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் பெயர் திருத்தம் போன்றவற்றை செய்ய கடந்த 4.5,ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. திருவாடானை தொகுதியில் மட்டும் 347 வாக்குச்சாவடி மையங்களில் இப்பணி நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்களாக 1,233 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 104 பேரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 549 வாக்காளரின் பெயர்கள் தவறுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் பெயர் சேர்த்தல் திருத்தம் போன்ற பணிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும். இதிலும் விடுபட்டவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். இத்தகவலை திருவாடானை தேர்தல் பிரிவின் துணை தாசில்தார் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை