திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்

திருவாடானை, மே 9: திருவாடானை அருகே வீழிமாத்தூர் பகுதியில் தங்கராஜ் என்பவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற மர்ம நபர் யாரோ ஒருவர் வைக்கோல் படப்பில் தீ வைத்து விட்டு சென்றார். இதனால் வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் அந்த வைக்கோல் படப்பில் கொளுந்து விட்டு எரிந்த தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி