திருவள்ளூர் அருகே பூட்டை உடைத்து வீடுகளில் நகை, பணம் கொள்ளை

திருவள்ளூர்: ஆவடியை சேர்ந்தவர் மனோகரன்(56). இவர் அதே பகுதியில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது தாய், தந்தை திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தில் வசித்து வந்தனர். கொரோனா பாதிப்பால் இருவரும் உயிரிழந்தனர். இதனால் வீடு பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றோருக்கு நினைவஞ்சலி செலுத்த கொப்பூரில் உள்ள வீட்டுக்கு வந்து பூஜை செய்துவிட்டு 20 சவரன் தங்க நகைகளை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் மனோகரனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் வைத்திருந்த 20 சவரன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து மனோகரன் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: இதேபோல் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம்(54). இவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பாப்பரம்பாக்கத்தில் இருந்த தாய் தந்தை இறந்துவிடவே வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தன்பேரில் விரைந்து வந்து பார்த்துள்ளார். அப்போது தாய், தந்தை உயிரோடு இருக்கும்போது சேமித்து வைத்திருந்த ₹50 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து நீலமேகம் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை