சென்னை: பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 28ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று இரவு 7.45 மணியளவில் புன்னை மர வாகனம், நாளை காலை 8.30 மணிக்கு சேஷ வாகனம், இரவு 7.45 மணியளவில் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 22ம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு அம்ச வாகனம், 23ம்தேதி காலை 6.30 மணிக்கு சூரிய பிரபை, இரவு 7.45 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும், 24ம்தேதி காலை காலை 5.30 மணியளவில் பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.25ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. காலையில் 6.30 மணியளவில் ஆனந்த வாகனத்திலும் இரவு 7.45 மணியளவில் யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.7ம் நாள் திருவிழாவான 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.27ம் தேதி காலை 6.30 மணிக்கு பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்திலும் இரவில் குதிரை வாகனத்திலும், 28ம் தேதி காலை 6.30 மணிக்கு ஆளும் பல்லக்கிலும், இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. அன்று பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மார்ச் 1ம் தேதி அவரோ ஹனம், பகல் 12.30 மணியளவில் துவாதச ஆராதனம், இரவு 10 மணியளவில் சப்தாவர்ணம்- சிறிய திருத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள், அம்பாள் எழுந்தருளி கோயிலை சுற்றியுள்ள தென்மாடவீதி, துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு மற்றும் திருக்குளத்தை சுற்றியும் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது….