பாலக்காடு, ஆக.19: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விவசாய தின விழாவில் பாலக்காட்டில் உள்ள ஆலத்தூர் வேளாண் அலுவலக ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. திருவனந்தபுரம் நிஷாகாந்தி கலையரங்கில் விவசாய தின விழா நடைபெற்றது. இதில், பாலக்காட்டில் உள்ள ஆலத்தூர் வேளாண் அலுவலக ஊழியர்களுக்கு விவசாயத்தில் சிறந்த சேவைக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.
முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வி.வி.ராகவன் நினைவாக எம்எல்ஏ பிரசேணன் தலைமையில் கேரள வேளாண் துறை அமைச்சர் பிரசாத் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அவர் ஆலத்தூர் தாலுகாவில் விவசாயினர் மேம்பாட்டுக்காக சிறந்த சேவைகள் புரிந்த ஊழியர்களை பாராட்டி பேசினார்.