திருவனந்தபுரத்தில் ஒரே நாளில் 36 பேரை கடித்து குதறிய நாய்

 

திருவனந்தபுரம், ஆக. 26 : திருவனந்தபுரம் நகரில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. பஸ், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் அலைந்து திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி நாயின் தாக்குதலுக்கு பலர் இரையாகி வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரம் நகரில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை ஒரே நாளில் 36 பேரை நாய் கடித்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பனங்கோடு, கரமனை, கிள்ளிப்பாலம் மற்றும் சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாயின் தாக்குதலுக்கு அந்த பகுதியினர் ஆளானார்கள்.

ஒரே நாய் தான் இவர்களை கடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நாய் கடித்த 36 பேர் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அட்டகாசம் செய்யும் இந்தத் தெரு நாயைப் பிடிப்பதற்காக திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்