திருமழிசையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர், ஆக. 9: திருமழிசை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கணபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை கோட்டத்தில், மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், காவல்சேரி சாலையில் அமைந்துள்ள மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், வரும் 11ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், செங்கல்பட்டு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்துகொண்டு, மின்நுகர்வோரின் குறைகளுக்கு தீர்வு காண உள்ளார். எனவே, திருமழிசை மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறையினை மனுவாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை