திருமயம் குறுவட்ட போட்டிகளில் வார்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

 

பொன்னமராவதி,செப்.11: பொன்னமராவதி அருகே வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திருமயம் குறுவட்டப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். 14 வயதுகுட்பட்டோர் மாணவிகள் பிரிவில் கீர்த்திகா 100 மீட்டரில் முதலிடமும், 200 மீட்டர் பிரிவில் இரண்டாமிமும் காவியா, மூன்றாமிடமும் பெற்றனர். 14 வயதுகுட்பட்ட மாணவர்கள் பிரிவில் முத்து மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

400மீட்டர் பிரிவில் கீர்த்திகா, காவியா, பிரித்தி, பிரியதர்சினி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 17வயதுக்குட்பட் மாணவிகள் பிரிவில் தனலெட்சுமி 100மீட்டரில் முதலிடமும், 200மீட்டரில் இரண்டாமிமும் பெற்றனர். தனலெட்சுமி, செல்வி, புகழரசி, கோடீஸ்வரி ஆகியோர் 400மீ போட்டியில் முதலிடம் பெற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்