ஊத்தங்கரை, ஆக.3: போச்சம்பள்ளி அருகேயுள்ள ஒத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(28). இவரது மனைவி கீதா(20). கடந்த 31ம் தேதி அண்ணாமலை தனது நிலத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர், மதியம் அவர் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த கீதா மாயமாகி இருந்தார். அவரை எங்கும் தேடியும் கிடைக்காததால், இதுபற்றி அண்ணாமலை மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.