திருமணத்துக்கு சென்றபோது தகராறு வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து: நண்பருக்கு வலை

புழல்: செங்குன்றம் அருகே திருமணத்துக்கு சென்றபோது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாலிபரை சரமாரியாக குத்திய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை செங்குன்றம் அருகே சோழவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (28), புகழ் (27). இருவரும் நண்பர்கள்.  இவர்கள் பாடியநல்லூர் பகுதியில் கடந்த வாரம் நடந்த திருமணத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு இடையே, வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள், அவர்களை சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.இந்தநிலையில்,  நேற்று முன்தினம் மதியம் புகழ், கத்தி, உருட்டு கட்டையுடன்  வசந்தகுமார் வீட்டுக்கு  சென்று, அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். மேலும், அவரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமாரை உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான புகழை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை