திருமங்கலம், மே 6: திருமங்கலம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் நாளை (மே 7) நடைபெற உள்ளது. இந்தகூட்டம் தொடர்பான நகர நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் ஆலோசனைபடி நேற்று மாலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஆசாத்அலி சேட் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருமங்கலத்தில் நாளை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் நடைபெறும் சாதனை விளக்க கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது மற்றும் அதிக அளவில் தொண்டர்கள் மற்றும் பாக முகவர்கள் பங்கேற்பது குறித்து நகர செயலாளர் ஸ்ரீதர் எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகர துணைசெயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி, நகராட்சி குழுத்தலைவர் ஜஸ்டின் திரவியம், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சாலிகா உல்பத் ஜெய்லானி, மங்கள கவுரி ராமச்சந்திரன், நிர்வாகிகள் கோல்டன் தங்கபாண்டி, சித்தநாதன், வெள்ளையத்தா, இளைஞரணி ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.