திருமங்கலம் உள்பட 3 இடங்களில் கலைஞர் சிலை அமைக்கப்படும்: தெற்கு மாவட்ட திமுக தீர்மானம்

 

திருமங்கலம், ஆக. 14: மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் கலைஞருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பது என மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமங்கலத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நேற்று திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர்மற்றும் பகுதி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் ரூ.3 கோடி செலவில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தினை சொந்தமாக வாங்கி, அதில் சிலை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், முத்துராமன், ஜெயச்சந்திரன், சுதாகர், அஜித்பாண்டி, பெரியசாமி, தனசேகரன், பேரூர் மற்றும் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டி, உசிலை சிவா, வரிசைமுகமது, ஜெயராமன், மணிசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு