திருமங்கலம் அருகே மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

திருமங்கலம், ஜூலை 30: திருமங்கலம் அருகே கப்பலூர் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மீனா (45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மீனா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இரவு தூங்கிய மீனாவை காலை முதல் காணவில்லை. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை மீனா வீட்டின் அருகேயுள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து திருமங்கலம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மீனா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை