திருமங்கலம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு மர்ம நபர்கள் கைவரிசை

திருமங்கலம், செப். 21: திருமங்கலம் அருகே மருந்து கடை உரிமையாளர் மனைவியிடம் மாத்திரை வாங்குவதுபோல் நடித்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடியை சேர்ந்தவர் பனையப்பன்(33). இவரது மனைவி தெய்வானை(28). இவர்கள் கள்ளிக்குடியில் உள்ள மதுரை மெயின் ரோட்டில் மருந்து கடை வைத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 18ம் தேதி பனையப்பன் வெளியே சென்றிருந்த்போது தெய்வானை மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினர். பின்னர் ஒரு வாலிபர் தலைவலி அதிகமாக இருப்பதாக கூறி, அதற்கான மாத்திரைகளை கேட்டுள்ளார்.தெய்வானை மாத்திரைகளை எடுத்து வந்து கொடுக்கும் போது, அந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தாலி செயினை பறித்தார். சுதாரித்த தெய்வானை செயினை இரு கைகளால் பற்றிக்கொண்டு கூச்சலிட்டார். இதற்கிடையே செயினின் ஒரு பகுதி அந்த வாலிபர் கையில் சிக்கியது. அதனுடன் டூவீலரில் இருந்தவருடன் வாலிபர் டூவீலரில் தப்பினார். இது குறித்து தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி