திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.74.35 லட்சம் வசூல்

 

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.74.35 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் குமரவேல், சரவணன், மேகவண்ணன், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்களால் 74 லட்சத்து 35 ஆயிரத்து 790 ரூபாய் ரொக்கம், 297 கிராம் தங்கம், 4,910 கிராம் வெள்ளி ஆகியவை போடப்பட்டு இருந்தது. இந்த பணியில் ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்