திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடல்

 

திருப்பூர், ஜூன்22: தமிழகம் முழுவதும் கோவில், பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 10, தெற்கு பகுதியில் 10 மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள், ஈரோட்டில் 24. நீலகிரியில் 3 மற்றும் கரூரில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படுகிற டாஸ்மாக் கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த கடைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை