திருப்பூர்,மே13: உலக செவிலியர்கள் தினம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பணிக்கு வந்திருந்த செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேக் வெட்டியும் விழா கொண்டாடப்பட்டது.இதில் மருத்துவமனை சூப்பிரண்டு ஜெய் சங்கர் நாராயணன், உதவி உண்டு உறைவிட மருத்துவர் சரவணக்குமார் மற்றும் செவலியர் கண்காணிப்பாளர் பத்மராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், விழாவில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.