திருப்பூரில் தோன்றிய வானவில்

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை வெயில் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திருப்பூர் சந்திராபுரம் , புஷ்பா நகர், காங்கயம் சாலை, அவிநாசி சாலை குமார் நகர், முத்தனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக வானில் இரட்டை வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை