திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை வெயில் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திருப்பூர் சந்திராபுரம் , புஷ்பா நகர், காங்கயம் சாலை, அவிநாசி சாலை குமார் நகர், முத்தனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக வானில் இரட்டை வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.