திருப்பரங்குன்றம் அருகே பழைய மர குடோனில் திடீர் தீ விபத்து

திருப்பரங்குன்றம், மே 9: திருப்பரங்குன்றம் அருகே பசுமலை மூலக்கரை பகுதியில் பழைய மரங்கள், மர சாமான்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் உள்ளது. தற்போது உபயோகத்தில் இல்லாத இந்த குடோன் அருகே நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்ற போது, அருகில் இருந்த மர குடோனுக்கு தீ பரவியது. தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் தீயணைப்பு வாகனம் ஏற்கனவே வெள்ளக்கல் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால், தல்லாகுளம் நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை