திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இயற்கை விவசாய காய்கறியில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம்: தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருமலையில் உள்ள அன்னமையா பவனில் ராயலசீமா மாவட்டங்களை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி தேவஸ்தான செயலதிகாரி தர்மா ரெட்டி பேசியதாவது: நோய் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை இலக்காக கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை சாகுபடி செய்வதில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு  வெங்கடேஸ்வர சுவாமிக்கு நைவேத்தியம் தயாரிக்க தொடங்கினோம். இதேபோல், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாதம் தயாரிப்பிலும் இதை விரிவுபடுத்த விரும்புகிறோம். இயற்கை விவசாய பொருட்கள் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இது இயற்கை விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு