திருப்பதியில் டிசம்பருக்கான தரிசனம் ரூ.300 டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதியில் டிசம்பருக்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.  கிரகணத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்  ஆன்லைனில் வரும் 11ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள்  தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு