திருநள்ளாறில் எலக்ட்ரிக் மோட்டார் திருட்டு

காரைக்கால், செப்.29: திருநள்ளாறில் எலக்ட்ரிக் மோட்டாரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்கு வீதியை சேர்ந்தவர் கென்னடி. இவர் காரைக்கால் திரு.பட்டினம் பகுதியில் உள்ள புதுச்சேரி மின்திறன் குழுமத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான எலக்ட்ரிக் மோட்டார் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி தோட்டத்திற்கு சென்றபோது, எலக்ட்ரிக் மோட்டார் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. வேலை நிமித்தமாக புதுச்சேரி சென்றதால், இதுகுறித்து கென்னடி நேற்று முன்தினம் திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எலக்ட்ரிக் மோட்டாரை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை