திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி பிரதான சாலையில் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி பிரதான சாலையில் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி பிரதான சாலை சுமைதாங்கி பேருந்து நிறுத்தம் அருகில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகள், பெட்ரோல் பங்க் உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பிரதான சாலையில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு விளைவித்து பல்வேறு தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பிரதான சாலையில் கொட்டிய குப்பையை அள்ளி சுத்தம் செய்ய வேண்டும், இனி குப்பை கொட்டுவதை தடைசெய்ய வேண்டும். மீறி குப்பை கொட்டினால் கொட்டுபவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை