திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷன் சிறந்த காவல் நிலையமாக தேர்வு

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 21: திருத்துறைப்பூண்டி சட்டம் -ஒழுங்கு காவல்நிலையம் 22ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழ்நாடு அரசு திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தை சிறந்த காவல் நிலையம் என்று அறிவித்துள்ளது. இதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை சென்னையில் தமிழக காவல்துறை தலைவரிடம் திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் வரும் 24ம் தேதி பெற உள்ளார். இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், அப்போதைய காவல் ஆய்வாளர் கழனியப்பன், தற்போதைய காவல் ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோருக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர்.

 

Related posts

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பிரியாணி சமையல் கூடத்திற்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலை: காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் டெக்னோ விஐடி 24 தொடக்கம்