திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டி, செப். 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பைக் டாக்ஸியை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ நகர தலைவர் புருஷோத்தாமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் நபி. ஜோதிபாசு மாவட்ட துணை தலைவர் பழனிவேல், சிஐடியூ நகர ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், சிஐடியூ மாவட்ட பொருளாளர் மாலதி,

ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகப்பா, செந்தில், அன்புமணி, பாஸ்கரன்,செந்தில், பன்னீர், ஆனந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பைக் டாக்ஸியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு