திருத்தணியில் சோகம் மின்சாரம் பாய்ந்து கேண்டின் ஊழியர் பலி: போலீசார் விசாரணை

 

திருத்தணி, ஜன. 1: வீட்டை சீரமைக்கும் பணியில் சுவர்களுக்கு, தண்ணீர் பிடித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கேண்டின் ஊழியர் பரிதாபமாக பலியானார்.  திருத்தணி மேட்டு தெருவில் வசிப்பவர் சந்திரன். இவருடைய மகன் சுதாகர்(36). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள்ள கேண்டினில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். தனக்கு சொந்தமான பழைய வீட்டை புதுப்பித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அந்த வீட்டை சீரமைக்கும் பணியில் நேற்றுமுன்தினம் மாலை அந்த வீட்டினுடைய சுவர்களுக்கு தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்விட்ச் பாக்ஸிருந்து மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் அவர் கீழே விழுந்து அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர், அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை