திருச்செந்தூர் கடற்கரையில் இருதரப்பினர் மோதல் பிரபல ரவுடி கைது

உடன்குடி, அக். 21: உடன்குடி மெய்யூரை சேர்ந்த சுடலைமுத்து மகன் வேல்குமார் (32). இவர், நண்பர்களுடன் கடந்த 18ம் தேதி திருச்செந்தூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நண்பர்களுடன் வந்த ஆலந்தலை தொம்மை வில்லவராயர் மகன் ராஜா(29) தரப்பினரை வேல்குமார் கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனால் திருச்செந்தூர் கடற்கரையில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வேல்குமார் மற்றும் நண்பர்கள் காரில் குலசேகரன்பட்டினம் செல்வதற்காக திருச்செந்தூர் -குலசை சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு காரில் வந்த ராஜா மற்றும் அவரது நண்பர்கள் வேல்குமார் காரை வழிமறித்து தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வேல்குமார் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார். கைதான ராஜா மீது திருச்செந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்