திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, ஆக.20: திருச்சி மாநகராட்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மனுக்களின் மீது உரிய கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். நகரப் பொறியாளர் சிவபாதம், துணை மேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி, ஜெயநிர்மலா, நகர்நல அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

வாய்க்காலில் அடித்துச்சென்ற கடமான் சடலமாக மீட்பு

பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி- விற்பனை

ஈரோடு மாநகருக்குள் ‘பீக் அவர்சில்’ கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை