திருச்சி போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்

திருச்சி: சென்னையில் திமுக பிரமுகரை தாக்கியது உள்பட 3 வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வந்த ஜெயக்குமார், திருச்சியில் தங்கி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று 4வது முறையாக ஜெயக்குமார் கையெழுத்திட்டார். இந்த வழக்கில் ஜெயக்குமாருடன் கைதான இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும் ஜாமீன் நிபந்தனைபடி நேற்று திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்….

Related posts

உயிரிழந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் குடும்பத்தாருக்கு, நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி