திருச்சி தீயணைப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்து 2 வீரர்கள் படுகாயம்

திருச்சி: திருச்சி கன்டோண்மென்ட் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை லால்குடி அருகே உள்ள அன்பில் தங்கராஜபுரம் தெருவை சேர்ந்த பிரசாந்த்(27), பெட்டவாய்த்தலை வைகோ நகரை சேர்ந்த சரவணன்(44) ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது 9.30 மணி அளவில் வீரர் பிரசாந்த், தீயணைப்பு புல்லட் வாகனத்தில் வைக்கப்படும் 2 கிலோ சிலிண்டரில் மெயின் சிலிண்டரிலிருந்து ஆக்சிஜன் காஸ் நிரப்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் காஸ் ஓவர்லோடு ஆனதால் திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்தார். அப்போது அருகில் நின்ற சரவணகுமாருக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வந்த நீதிமன்ற போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் காயமடைந்த பிரசாந்த், சரவணகுமார் ஆகியோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்