திருக்காடுதுறை அருகே பாம்பு பிடிபட்டது

 

வேலாயுதம்பாளையம், மார்ச் 21: கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்துமேடு பகுதியில் இருந்து காகித ஆலைக்கு செல்லும் சாலையில் தீயணைப்பு நிலையம் மற்றும் குடியிருப்பு வீடு உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த பாம்பு குடியிருப்பு வீடு மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குள் உள்ளே நுழைவதற்கு முயற்சி செய்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் ஓடிச் சென்று பாம்பு பிடிக்கும் குச்சியை எடுத்து வந்து பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.  ஆட்கள் நின்று கொண்டிருந்த போதே அந்தப் பகுதிக்கு பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்