தியேட்டர்களில் 100% இருக்கையை பயன்படுத்த அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்து கடந்த அக்டோபர் 23ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிபுணர்களின் ஆலோசனைப்படி அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதில் தலையிட முடியாது. மேலும், மீன் சந்தைகளில் இருப்பதைப் போல திரையரங்குகள் இருக்காது. அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்த ஆதாரங்களும் இல்லாமல் இதுபோல வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த கூடாது. மாநில அரசு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் சூழலை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்