திமுக முப்பெரும் விழா விருது அறிவிப்பு: பெரியார்-சம்பூர்ணம் சாமிநாதன்: அண்ணா-மோகன்: கலைஞர்-டி.ஆர்.பாலு

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது மோகனுக்கும், கலைஞர் விருது டி.ஆர்.பாலுவுக்கும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது மோகனுக்கும், கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,க்கும், பாவேந்தர் விருது திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் கலைஞர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, நேற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது, திமுக துணைப் பொதுச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்