சென்னை: திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஜெயக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் அளவுக்கு உகந்த வழக்கு அல்ல இது என்று ஜெயக்குமார் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் தரப்பு குறிப்பிட்டிருக்கிறது. …