திமுக திட்டங்களை செயல்படுத்துவேன்: எஸ்.ஆர்.ராஜா உறுதி

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா நேற்று மேற்கு தாம்பரம், எம்.கே.ரெட்டி சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று அங்கிருந்த மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில், தாம்பரம் பகுதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை அதிமுகவினர் முடிக்காமல் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர். இதனால், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், உடனடியாக பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடித்து தருவேன். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். வளர்ச்சி பணிகளை விரைந்து செய்வேன்’ என்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் ‘நிச்சயம் நாங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகவும், உங்களை மீண்டும் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுப்போம்’ என நம்பிக்கை தெரிவித்தனர். பிரசாரத்தின்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….

Related posts

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் திட்டம் தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு