திருத்துறைப்பூண்டி, பிப்.16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் கார்த்தி, நகர் மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மீனாட்சி சூரிய பிரகாஷ், மாவட்ட திமுக சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ஓம் சக்தி கண்ணன் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.