திமுக சார்பில் வீடுகள் தோறும் சுவர் கடிகாரம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி தி.மு.க. சார்பில் வீடு தோறும் கடிகாரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கேளம்பாக்கம் ஜோதி நகரில் நடந்தது. சாத்தங்குப்பம் மேற்கு கிளை செயலாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் தலைமை தாங்கினார். ஜோதி நகர் கிளை செயலாளர் கே.ஏ.டி.அன்பு வரவேற்றார். திருப்போரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இதயவர்மன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சுவர் கடிகாரங்களை வழங்கி வீடு தோறும் கடிகாரம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் கிளை செயலாளர்கள் தி.க.பாளையம், அசுந்தன், பிரபு, ராணி எல்லப்பன், தனக்கோட்டி அன்பு, லதா, பிரவீணா, விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் மதுமிதா நன்றி கூறினார்….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது