திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தம்மம்பட்டி, மே 9: சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர், தண்ணீைர் பந்தல் திறப்பு விழா நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வழங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் சின்னதுரை, முன்னாள் எம்எல்ஏ சித்தார்த்தன், தம்மம்பட்டி நகர செயலாளர் சண்முகம், தம்மம்பட்டி நகரதுணைச் செயலாளர் கலிய வரதராஜ், கவுன்சிலர் நடராஜ், மாவட்ட பிரதிநிதி முத்தையன், மாவட்ட சிறுபான்மை பிரிவு சையது சவாலி, ரமேஷ், நித்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி