தேவகோட்டை, ஜூலை 7: சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக நாகனி.பா.செந்தில்குமார் இருந்து வருகிறார். தற்போது திமுக தலைமைக்கழகம் மீண்டும் இவரையே இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பில் நியமனம் செய்து அறிவித்தது. கட்சியின் மேல்மட்ட,சிவகங்கை மாவட்ட பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் நேரிலும் போனிலும் பாராட்டு தெரிவித்தனர். இவர் மாவட்ட கவுன்சிலராகவும் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.