நீடாமங்கலம், செப். 15: நீடாமங்கலத்தில் திமுகவில் இணைந்த இளைஞர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக நகர செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்து இளைஞரணி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ராமராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகானந்தம், நீடாமங்கலம் நகர இளைஞரணி அமைப்பாளர் காந்திமணி, துணை அமைப்பாளர்கள் அருண், மகேஷ், மணி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.