திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை 4,229 எழுதினர்

 

திண்டுக்கல், ஜூலை 14: தமிழகத்தில் நேற்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 6,200 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 4,229 நபர்கள் தேர்வு எழுதினர். 1,971 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியோர் 68 சதவீத பேர் ஆவர். தேர்வினை கண்காணிக்க 6 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 23 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் இருந்தனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தது. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி